search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உக்ரைன் ரஷிய போர்"

    • ரஷியப் படைக்கு எதிராக உக்ரைன் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது,
    • உக்ரைன் எதிர்தாக்குதல் வேகம் தற்போது சற்று குறைந்துள்ளது.

    ரஷிய- உக்ரைன் போர் 507-வது நாளை எட்டிவிட்டது. ரஷிய படைகளை பின்னுக்கு தள்ளுவதில், உக்ரைன் எதிர்பார்த்ததை விட மெதுவான வேகத்தில் முன்னேறி வருவதாக உக்ரைன் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

    இந்நிலையில் போர் நிலவரம் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் நமது தாக்குதலை எதிர்கொள்ள ரஷியா தன்னிடமுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வருகிறது. முன்னேறும் ஒவ்வொரு 1,000 மீட்டருக்கும் நாம் நமது போர் படைப்பிரிவின் ஒவ்வொருவருக்கும் நன்றி கூற வேண்டும்.

    தற்போது பெரிய அளவிலான அச்சுறுத்தல்கள் பெலாரஸ் பகுதியில் இருந்து இல்லை என முக்கியமான அறிக்கை கிடைத்துள்ளது. அங்குள்ள நிலவரத்தை நான் உன்னிப்பாகக் கண்காணிக்கிறேன். ஆனால் எனது முழு கவனமும் தற்போது போரின் முன்வரிசையை குறித்தே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரஷியாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் படை, பெலாரஸ் துருப்புகளுக்கு பயிற்சி அளிக்க ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது என்று செய்திகள் வெளியாகின. இதன் பின்னணியில் ஜெலன்ஸ்கியின் இந்த உரை பார்க்கப்படுகிறது.

    உக்ரைனுக்கு பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வழங்கி வரும் மேற்கத்திய நட்பு நாடுகள், போரில் வேகமாக முன்னேற உக்ரைனுக்கு அழுத்தம் எதுவும் கொடுக்கவில்லை என ஜெலன்ஸ்கியின் அலுவலக தலைவர் ஆன்ட்ரி எர்மக் கூறியிருக்கிறார்.

    வாக்னர் படையால் கைப்பற்றப்பட்ட கிழக்கு நகரமான பாக்முட் அருகே உள்ள பகுதிகளையும், நாட்டின் தென்கிழக்கில் உள்ள கிராமங்களையும் மீண்டும் கைப்பற்றுவதில் மட்டுமே உக்ரைனின் பல வார கால எதிர்த்தாக்குதல் இருந்து வருகிறது.

    கிரிமியா தீபகற்பத்தில் ரஷிய படைகள் நிறுவியுள்ள தரைப்பாலத்தை துண்டிக்க உக்ரேனியப் படைகள் முயற்சி செய்து வருகின்றன.

    • ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் கக்கோவ்கா அணை உடைக்கப்பட்டது.
    • பல அடி உயரத்துக்கு சென்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கின.

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளன. இதில் தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றியது.

    இதற்கிடையே ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் கக்கோவ்கா அணை உடைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த நீர் மின் நிலையமும் சேதம் அடைந்தது.

    அணை மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் தான் தாக்குதல் நடத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.

    இதற்கிடையே டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய அணையின் ஒரு பகுதி உடைந்ததால் சுமார் 18 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியது.

    அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் பல நகரங்கள், கிராமங்களுக்குள் புகுந்தது. பல அடி உயரத்துக்கு சென்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கின.

    இந்நிலையில், ரஷ்யாவால் தகர்க்கப்பட்டதாக கூறப்படும் கக்கோவ்கா அணை மீது நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வெடிகள் மிதப்பதாகவும், அதிகளவில் நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் உக்ரைன் துணைப் பிரதமர் ஒலெக்சாண்டர் குப்ராகோவ் எச்சரித்துள்ளார்.

    மேலும் அவர், "முன்பு போடப்பட்ட கண்ணிவெடிகள் நீரில் தற்போது மிதந்து வருகிறது. அவை வெடித்து சிதறுகின்றன" என்றார்.

    • கெர்சன், கக்கோவ்கா பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உக்ரைன் அரசு அறிவுறுத்தியது.
    • அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் 24 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

    கிவ்:

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 1½ ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளன.

    இதில் தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றியது. இதற்கிடையே ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் கக்கோவ்கா அணை உடைக்கப்பட்டது.

    மேலும் அங்கிருந்த நீர் மின் நிலையமும் சேதம் அடைந்தது. அணை மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் தான் தாக்குதல் நடத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.

    இதற்கிடையே டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய அணையின் ஒரு பகுதி உடைந்ததால் சுமார் 18 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து கெர்சன், கக்கோவ்கா பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உக்ரைன் அரசு அறிவுறுத்தியது.

    மேலும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் பல நகரங்கள், கிராமங்களுக்குள் புகுந்தது. பல அடி உயரத்துக்கு சென்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கின.

    சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. சில இடங்களில் வீடுகளும் வெள்ளத்தில் மிதந்து சென்றன. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் 24 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

    அங்கிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 17 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். பலர் வீட்டின் கூரை மீது அமர்ந்து இருந்தனர். அவர்களை படகில் சென்று மீட்பு குழுவினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

    அணை உடைந்துள்ளதால் ரஷிய மற்றும் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சுமார் 42 ஆயிரம் பேர் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் அணையில் இருந்து வெளியேறிய வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதுதொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை கூறும்போது, 'உக்ரைன் அணை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும், என்று தெரிவித்துள்ளது.

    அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி கூறும்போது, 'இந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதை அமெரிக்காவில் உறுதியாக கூற முடியாது. ஆனால் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்கா இறுதி முடிவுக்கு இன்னும் வரவில்லை. நாங்கள் தகவல்களை சேகரித்து உக்ரைனியர்களுடன் பேச முயற்சிக்கிறோம்' என்றார்.

    இதற்கிடையே ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள நதிக்கரையில் இருக்கும் கஸ்கோவா டிப்ரோவா உயிரியல் பூங்கா முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருந்த 300 விலங்குகளும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மோதல் நேரங்களில் அமெரிக்கா உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பயன்படுத்துகின்றன.
    • குறைந்த செலவே என்பதால் பயங்கரவாதிகளும் அதிகமாக பயன்படுத்துகின்றன.

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆரம்ப கட்டத்தில் ஏவுகணை, போர் விமானம், டாங்கிகள், ஹெலிகாப்டர் போன்றவை மூலம் தாக்குதல் நடத்தி உக்ரைனை உருக்குலைத்தது ரஷியா.

    அமெரிக்கா போன்ற நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் செய்ய, உக்ரைனும் ரஷியா மீது திடீர் திடீரென தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது நேருக்கு நேர் மோதல், விமான தாக்குதல் குறைந்து டிரோன்களை பயன்படுத்தி வருகின்றன.

    செலவும் குறைவு, வீரர்கள் மரணமும் கிடையாது. சேதப்படுத்தும் இடம் அதிகம். இதனால் அதிக அளவில் பயன்படுத்துகின்றன. கடந்த 30-ந்தேதி (நேற்று முன்தினம்) உக்ரைன் திடீரென ரஷியா மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. சுமார் 8 டிரோன்கள் இதற்காக பயன்படுத்தியதாக ரஷியா குற்றம்சுமத்தியுள்ளது.

    இதில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. பொதுமக்களும் காயம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக ரஷியா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தின. இதில் பலர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகின.

    இரண்டு நாடுகளும் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டிரேன்களை அனுப்பி ரிமோட் மூலம் இயக்கி வெடிக்க செய்கின்றனர். இதனால் பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது.

    வான்வெளி தாக்குதலுக்கு டிரோன்களை பயன்படுத்துவது உலக நாடுகளில் அதிகரித்துள்ளதால் இது பேராபத்தாக முடியுமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    டிரோன் கண்டுபிடிக்கப்பட்டபோது உளவு பார்ப்பதற்காக அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தின. எதிரி நாடுகள் எல்லைக்குள் சென்று உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன.

    தற்போது எந்த இடத்தில் இருந்து டிரோன் தங்கள் எல்லைக்குள் ஊடுருவுமோ என்ற அச்சம் ஒவ்வொரு நாடுகளுக்கும் தலைதூக்கியுள்ளது.

    உலக வல்லரசு மற்றும் வளர்ந்த நாடுகள் சர்வதேச சட்டம் கொண்டு வந்து இதை கட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே, டிரோன் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.

    டிரோன் பயன்பாடு, வாங்குவது, பயன்படுத்துவது மற்றும் அதன் ஆபத்து

    1. மோதலின்போது அமெரிக்கா உள்ளிட்ட 100 நாடுகள் டிரோன்கள் பயன்படுத்தி வருகின்றன.

    2. குறைந்த செலவு மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியை இலக்கு வைத்து தாக்க முடியும் என்பதால் பயங்கரவாதிகள் கூட பயன்படுத்துகின்றனர்.

    3. வணிகம் மற்றும் நுகர்வோர் வசதிக்காக பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக கொண்டு செல்ல டிரோன் பயன்படுத்தப்படுகிறது. 2020-ல் இதன் எண்ணிக்கை 5 மில்லியனாக இருந்த நிலையில், 2025-க்குள் 7 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    4. உலகளவில் 2021-ல் இருந்து 2022-ல் விற்பனை 57 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    5. கடந்த சில வருடங்களாக டிரோன்களை வாங்குவது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. பல கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அது மீறப்படுகின்றன.

    6. ஒவ்வொரு நாடுகளும் எந்தவித அச்சமின்றி, எதிர் நாடுகள் கேள்வி கேட்கும் என்பது குறித்து கவலையில்லாமல் எளிதாக எந்த இடத்திலும் பறக்க விடுகின்றன. இதற்கு வானில் பறப்பதற்கான சிறிதளவான வழிகாட்டு தல்தான் காரணம்.

    7. ஒவ்வொரு நாடுகளும் வாங்குவது, பயன்படுத்துவதில் தனித்தனி ஆர்வம் காட்டுகின்றன.

    8. சீனா கடற்பகுதிகளை கண்காணிப்பதற்கான அதிக அளவில் பயன்படுத்துகின்றன. அதனை பார்த்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதில் மேலும் தொழில்நுட்பத்தை புகுத்தி பயன்படுத்த தொடங்கியுள்ளன.

    9. துருக்கி அதிநவீன டிரோனை பயன்படுத்துகிறது. துருக்கி பயன்படுத்தும் 'பேராக்டர் டிபி2' என்ற டிரோன், லேசர் வழிகாட்டும் குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அது ஒரு டிரக்கில் பொருத்தும் அளவிற்கு சிறிதானது.

    10. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சீனா மற்றும் துருக்கியிடம் இருந்து டிரோன்கனை வாங்கி, மோதல் போக்கில் உள்ள ஏமன், லிபியா எல்லையில் ஊடுருவல்களை கண்காணிக்க பயன்படுத்துகிறது.

    11. ஆயுதமேந்திய டிரோன்களை கொண்ட நாடுகள், சர்வதேச வழிகாட்டுகளை கடைபிடிக்காமல், தங்களுக்கென வழிகாட்டுதல்களை தயார் செய்து அதை பின்பற்றுகின்றன.

    12. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தாக்குதலுக்கு அங்கீகாரம் அளிக்காத வரை அல்லது சொந்த பாதுகாப்பு தவிர்த்து டிரோன் பயன்படுத்துவதை சர்வதேச சட்டம் தடை செய்கிறது.

    13. ஆனால், ஒரு முழுமையான போர் தொடங்குவதற்கு குறுகிய காலத்தில், கண்காணிப்பிற்காக டிரோன்களை பயன்படுத்த முடியும்.

    14. டிரோன் பறப்பதற்கான தேசிய மற்றும் சர்வதேச விதிமுறைகளை பயன்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது.

    15. கடந்த 20 ஆண்டுகளாக இதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்க வல்லுநர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

    16. முறையான வழிகாட்டுதல், விதிமுறை இல்லாததால் ஒவ்வொரு நாடுகளும் ராணுவத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என பெரும்பாலான டிரோன் வல்லுநர்கள் கருதுகிறாரள்.

    17. டிரோன்கனை வெவ்வேறு ரிமோட் மூலம் இயக்கப்படும் சூழ்நிலை உள்ளதால், தேனீக்கள் போன்று ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தாக்கும் அபாயம் உள்ளது.

    18. வான்வெளிக்கு வெளியிலும் தாக்குதல் நடத்த முடியும்.

    19. போர்க்களத்தில் டிரோன்களை கண்டறிவது மிகவும் கடினமானதாக உள்ளது.

    20. உக்ரைன், ரஷிய படைகளுக்குக் கூட சரியாக எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய கடினமாக உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் டிரோன்கள் வேகமாக செல்லும் வாகனங்களாகின்றன.

    பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இந்த கட்டுரையை விரைவாக எழுதியுள்ளார்.

    • 36 மணி நேரத்துக்கு தாக்குதல்களை நிறுத்தும்படி ரஷிய படைகளுக்கு புதின் உத்தரவிட்டார்.
    • உக்ரைனில் உள்ள ரஷிய படைகள், தளவாடங்கள் மீது உக்ரைனிய ஆயுத படைகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருவதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

    மாஸ்கோ:

    ரஷியா மற்றும் உக்ரைனில் வாழும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள் இன்று (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இதையொட்டி உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷிய அதிபர் புதினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அதனை ஏற்று, வெள்ளிக்கிழமை நண்பகல் தொடங்கி சனிக்கிழமை நள்ளிரவு வரை 36 மணி நேரத்துக்கு தாக்குதல்களை நிறுத்தும்படி ரஷிய படைகளுக்கு புதின் உத்தரவிட்டார். ரஷிய படைகளின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு போர்நிறுத்தம் பொருந்துமா, உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டால் ரஷியா திருப்பித் தாக்குமா என்பது அந்த உத்தரவில் தெளிவுப்படுத்தவில்லை.

    இந்த நிலையில் உக்ரைனில் உள்ள ரஷிய படைகள், தளவாடங்கள் மீது உக்ரைனிய ஆயுத படைகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருவதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. அதே சமயம் தாக்குதல் நடத்திய உக்ரைன் படைகள், ரஷியாவின் எதிர்தாக்குதல் அடக்கப்பட்டதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • ரஷிய ராணுவம் வெளியேறியதால் கெர்சன் நகரம் உக்ரைன் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
    • கெர்சன் நகரை ஆக்ரமித்தபோது ரஷிய ராணுவம் 400-க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்துள்ளதாக உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டினார்.

    கீவ்:

    உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின.

    அந்த நகரின் முக்கிய இடங்களில் பறந்த ரஷிய கொடிகளை கீழே இறக்கிய உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டுக் கொடியை ஏற்றினர்.

    இதற்கிடையே, கெர்சன் நகரை ஆக்ரமித்த போது, ரஷிய ராணுவம், 400 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

    புலனாய்வாளர்கள் ரஷிய போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இறந்த உக்ரைன் பொதுமக்கள், படைவீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக ரஷிய வீரர்கள் மற்றும் கூலிப்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன என தெரிவித்தார்.

    இந்நிலையில், கெர்சன் நகரில் இருந்து ரஷிய ராணுவம் வெளியேறியுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அந்நகரைப் பார்வையிட்டார். அங்குள்ள படைவீரர்களிடம் நகரின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அதிபரைப் பார்த்த மக்கள் உற்சாகமாக கோஷமிட்டனர்.

    அப்போது பேசிய அவர் கெர்சன் நகரில் ரஷிய ராணுவம் வெளியேறியது போரின் முடிவுக்கான ஆரம்பம் என தெரிவித்தார்.

    • ரஷிய ராணுவம் வெளியேறிய நிலையில், கெர்சன் நகரம் உக்ரைன் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
    • உக்ரைன் பொதுமக்கள் மற்றும் வீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

    கீவ்:

    உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின. அந்த நகரின் முக்கிய இடங்களில் பறந்த ரஷிய கொடிகளை கீழே இறக்கிய உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டு கொடியை ஏற்றினார்கள்.

    இந்நிலையில் கெர்சன் நகரை ஆக்ரமித்த போது, ரஷிய ராணுவம், 400 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். புலனாய்வாளர்கள் ரஷிய போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இறந்த உக்ரைன் பொதுமக்கள் மற்றும் படைவீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக ரஷிய வீரர்கள் மற்றும் கூலிப்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்க அதிபர் ஜோபைடனின் 2 சகோதரர்கள், ஒரு சகோதரி உள்பட 200 பேர் ரஷியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கெர்சனில் வசித்த மக்களும் அந்நகருக்குள் மீண்டும் வந்தனர்.

    உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இதில் கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. கெர்சன் நகரை மீட்டு உக்ரைன் படை கடுமையாக சண்டையிட்டு வந்தது. இந்தநிலையில் கெர்சன் நகரில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதாக ரஷியா அறிவித்தது. இதையடுத்து அங்கிருந்து ரஷிய படைகள் வெளியேறின.

    இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "ரஷிய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டுள்ளோம். அந்நகர் உக்ரைன் படை வசம் வந்துள்ளது" என்றார். ரஷிய படைகள் வெளியேறியதையடுத்து கெர்சன் நகருக்குள் உக்ரைன் ராணுவம் நுழைந்தது. மேலும் கெர்சனில் வசித்த மக்களும் அந்நகருக்குள் மீண்டும் வந்தனர்.

    சாலைகளில் குவிந்த மக்கள் உக்ரைனுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். முக்கிய இடங்களில் பறந்த ரஷிய கொடிகளை கீழே இறக்கிவிட்டு உக்ரைன் தேசிய கொடியை ஏற்றினார்கள். இது தொடர்பாக வீடியோக்களை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இதற்கிடயே கெர்சன் நகரில் ரஷியப் படையினர் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இதனால் தேடுதல் நடவடிக்கை முடியும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உக்ரைன் ராணுவத்தினர் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். உக்ரைன் விவகாரத்தில் ரஷியா- அமெரிக்கா இடையே மோதல் இருந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடனின் 2 சகோதரர்கள், ஒரு சகோதரி உள்பட 200 பேர் ரஷியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷிய படைகள் வசம் சென்றுள்ளன.
    • மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பால் பொதுமக்கள் அவதி.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 9 மாதங்களாகிறது. இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷிய படைகள் வசம் சென்றுள்ளன.

    இதற்கிடையே, உக்ரைன் தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷிய ராணுவத்தினர் அங்குள்ள வீடுகளை ஆக்கிரமித்துடன் பொருட்களை கொள்ளை அடிப்பதாகவும், பொதுமக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாகவும் உக்ரைன் குற்றம்சாட்டியது.

    அந்த நகரத்தில் 3 லட்சம் பேர் இருப்பதாக கருதப்படும் நிலையில், மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருவதாகவும், இது உக்ரைனின் நாசவேலை என்றும் மின்சாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் ரஷிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் ரஷிய படையினர் 1.5 கி.மீ. மின் கம்பிகளை அகற்றி விட்டதாக உக்ரைன் படையினர் குற்றம் சாட்டினர். அப்பகுதியை மீண்டும் உக்ரைன் கைப்பற்றும் வரை மின்சாரம் திரும்ப வராது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து ராணுவத்தை வெளியேறுமாறு ரஷியா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஜெனரல் செர்ஜி சுரோவிகின், நாங்கள் எங்கள் வீரர்களின் உயிரையும் எங்கள் பிரிவுகளின் சண்டை திறனையும் காப்பாற்றுவோம். அவற்றை மேற்கு கரையில் வைத்திருப்பது பயனற்றது. அவர்களில் சிலர் மற்ற முனைகளில் பயன்படுத்தப்படலாம் என தெரிவித்தார்.

    • கருங்கடல் பகுதியில் உக்ரைனின் பாம்பு தீவை ரஷிய படைகள் சமீபத்தில் கைப்பற்றியது.
    • ராணுவ தளவாடங்களை அழிக்க ரஷியா தாக்குதல் நடத்தியிருக்கலாம்.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 5-வது மாதத்தை நெருங்கியுள்ளது. தற்போது கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷிய படைகள் கடுமையாக தாக்குதலை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் கருங்கடல் பகுதியில் உக்ரைனின் பாம்பு தீவை ரஷிய படைகள் சமீபத்தில் கைப்பற்றியது. அந்த தீவை மீட்க உக்ரைன் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து பாம்பு தீவில் இருந்து ரஷிய படைகள் வெளியேறியது.

    இந்த நிலையில் பாம்பு தீவு மீது இன்று ரஷியா போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசியது. சுகோய்-30 ரக போர் விமானம் மூலம் பாம்பு தீவு மீது பாஸ்பரஸ் ரக குண்டுகள் வீசப்பட்டன.

    இதுகுறித்து உக்ரைன் ராணுவம் கூறும்போது, "ரஷிய விமானப் படையின் சுகோய்-30 விமானங்கள், பாம்பு தீவில் இரண்டு முறை பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியது என்று தெரிவித்தது.

    பாம்பு தீவில் இருந்து ரஷிய படைகள் விலகினாலும், அங்குள்ள அதிநவீன ராணுவ தளவாடங்களை திரும்ப கொண்டு செல்ல முடியவில்லை. எனவே ராணுவ தளவாடங்களை அழிக்க ரஷியா தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

    உக்ரைனின் ஓடேசா நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.

    உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி தாக்குதலை தொடங்கியது. 5 மாதங்களுக்கு மேல் இந்த தாக்குதல் நீடித்து வருகிறது.

    இந்த போரில் ஏராளமான வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலியாகிவிட்டனர். பல நகரங்கள் ரஷியாவின் மும்முனை தாக்குதலால் சீர்குலைந்து போய் உள்ளது.

    உயிருக்கு பயந்து பொதுமக்கள் அங்கிருந்து காலி செய்து ஓடி விட்டனர்.

    ரஷியபடைகள் தற்போது கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது தங்கள் கவனத்தை திருப்பி உள்ளது. அங்குள்ள பெரும்பாலான நகரங்களை ரஷியா கைப்பற்றிவிட்டன. லிவிசான்ஸ்சா நகரத்தை பிடிக்க தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள உக்ரைனுக்கு சொந்தமான ஸ்னேக் தீவில் இருந்து ரஷிய படைகள் வெளியேறிவிட்டன.

    இந்த தீவில் இருக்கும் ரஷியபடைகளுக்கு உணவு மற்றும் பொருட்கள் ஏற்றி சென்ற படகுகள் மீது உக்ரைன் படையினர் ஆளில்லாத விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

    உக்ரைன் வீரர்களின் உக்கிரமான தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறியதாக உக்ரைன் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். இதனால் ஸ்னேக் தீவை உக்ரைன் தன் வசப்படுத்தி உள்ளது.

    ஸ்னேக் தீவில் இருந்து ரஷிய படைகள் வெளியேறிய சில மணி நேரங்களில் உக்ரைன் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான ஓடேசாவில் உள்ள பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

    இந்த தாக்குதலில் அந்த கட்டிடம் சேதம் அடைந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே 3 குழந்தைகள் உள்பட 6 பேர் இறந்தனர்.

    இதுபற்றி அறிந்த ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மேலும் 4 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் பெயர் உடனடியாக தெரியவில்லை.

    இந்த தாக்குதலில் மேலும் பலர் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    • கடந்த ஏப்ரல் மாதம் உக்ரைனுக்கு 10000 இணையதள கருவிகளை எலான் மஸ்கின் ஸ்டார் லைட் நிறுவனம் அனுப்பியது.
    • தற்போது உக்ரைனுக்கு சுமார் 15000 இணையதள கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.

    கீவ்:

    உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில் நிதி மற்றும் ஆயுத உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

    இதேபோல் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு தனது ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது உக்ரைன் ராணுவம் பயன்படுத்தும் வகையில் அவர் மேலும் சில ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையதள கருவிகளை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் உக்ரைனுக்கு சுமார் 15000 இணையதள கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 10000 கருவிகள் அனுப்பப்பட்டது. இத்துடன் சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் பெறும் டெஸ்லா கருவிகளையும் உக்ரைன் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக அனுப்பியுள்ளோம் என கூறியுள்ளார்.

    ×